உள்ளூர் செய்திகள்

காட்டுமன்னார்கோவில் பகுதியில் லாட்டரி சீட்டு விற்ற வாலிபர் கைது

Published On 2023-08-08 07:29 GMT   |   Update On 2023-08-08 07:29 GMT
  • சந்தே கத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
  • லாட்டரி சீட்டு விற்பனை செய்த ராஜூவ்காந்தி என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கடலூர்: 

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் நேற்று இரவு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது ராஜேந்திர சோழகன் பகுதியில் சந்தே கத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகனை விற்பனை செய்வது தெரியவந்தது. இதனையடுத்து லாட்டரி சீட்டு விற்பனை செய்த ராஜூவ்காந்தி என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.  

Tags:    

Similar News