உள்ளூர் செய்திகள்

சீவலப்பேரி அருகே வாலிபர் திடீர் சாவு

Published On 2023-09-09 09:15 GMT   |   Update On 2023-09-09 09:15 GMT
  • சீவலப்பேரி அருகே உள்ள கீழ பாலாமடை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சுடலை மகன் கார்த்திக்குக்கு சமீபத்தில் காலில் காயம் ஏற்பட்டுள்ளது.
  • இதற்கு பார்வை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது பாலாமடை பகுதியில் திடீரென மயங்கி விழுந்து விட்டார்.

நெல்லை:

நெல்லையை அடுத்த சீவலப்பேரி அருகே உள்ள கீழ பாலாமடை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சுடலை. இவரது மகன் கார்த்திக் (வயது 23). இவருக்கு சமீபத்தில் காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதற்கு பார்வை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது பாலாமடை பகுதியில் திடீரென மயங்கி விழுந்து விட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் கார்த்திக்கை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்தனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக சீவலப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News