உள்ளூர் செய்திகள்

போத்தனூர் அருகே 2 வயது மகனுடன் இளம்பெண் மாயம்

Published On 2023-08-01 09:41 GMT   |   Update On 2023-08-01 09:41 GMT
  • அபர்ணா அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் பேசி வந்தார்.
  • மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

குனியமுத்தூர்,

கோவை போத்தனூரை சேர்ந்த சியாம்குமார். இவரது மனைவி அபர்ணா (24). இவர்களுக்கு ஆயுஷ் (2) என்ற மகன் உள்ளார். அபர்ணா அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் பேசி வந்தார். இதனை அவரது கணவர் கண்டித்தார். இதன் காரணமாக கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் அவர் தனது கணவரிடம் பேசாமல் இருந்தார்.

சம்பவத்தன்று சியாம்குமார் வழக்கம் போல வேலைக்கு புறப்பட்டு சென்றார். அப்போது வீட்டில் தனியாக இருந்த அபர்ணா தனது 2 வயது மகனுடன் ஓட்டம் பிடித்தார். வேலை முடிந்து வீட்டிற்கு வந்த அவர், வீட்டில் மனைவி மற்றும் மகன் இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் 2 பேரையும் அக்கம் பக்கத்தில் தேடினார். ஆனால் எந்த பலனும் இல்லை. இதுகுறித்து சியாம்கு மார் போத்தனூர் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து மகனுடன் மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

சவுரிபாளையம் உப்பிலி பாளையம் ரோட்டை சேர்ந்தவர் மார்ட்டின். இவரது மகள் மெர்லின் ஜெசிகா (19). இவர் தனியார் கல்லூரியில் பி.பி.ஏ., படித்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த மெர்லின் ஜெசிகா தனது பெற்றோரிடம் வெளியே செல்வதாக கூறி விட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இது குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவியை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News