உள்ளூர் செய்திகள்

கைக்குழந்தையுடன் முன்னாள் காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்

Published On 2022-09-03 09:25 GMT   |   Update On 2022-09-03 09:25 GMT
  • மனைவி வீட்டில் இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
  • காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.

கோவை:

கோவை செட்டிப்பாளையம் அருகே உள்ள பச்சாபாளையத்தை சேர்ந்தவர் 20 வயது இளம்பெண். இவருக்கு கடந்த 1½ வருடங்களுக்கு திருமணம் நடந்தது. 6 மாதத்தில் பெண் குழந்தை உள்ளது.

திருமணத்துக்கு முன்பே இளம்பெண்ணுக்கு வேறு ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் தீவிரமாக காதலித்து வந்தனர். இந்த காதல் விவகாரம் இளம்பெண்ணின் வீட்டிற்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இளம்பெண்ணின் பெற்றோர் வேறு ஒரு மணமகனை பார்த்து மகளுக்கு திருமணம் செய்தனர்.

ஆனால் இளம்பெண் தனது முன்னாள் காதலனுடன் தொடர்ந்து பேசி பழகி வந்தார். மேலும் அவர் தனது கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் அந்த வாலிபரை தனது வீட்டிற்கு அழைத்து அவருடன் ஜாலியாக இருந்து வந்தார். இந்த கள்ளக்காதல் விவகாரம் இளம்பெண்ணின் கணவருக்கு தெரிய வரவே கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

சம்பவத்தன்று இளம்பெண்ணின் கணவர் வழக்கம் போல வேலைக்கு புறப்பட்டு சென்றார். அப்போது வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் தனது கைக்குழந்தையை தூக்கி கொண்டு கள்ளக்கா தலனுடன் ஓட்டம் பிடித்தார். வேலை முடிந்து வீட்டிற்கு வந்த கணவர் தனது மனைவி வீட்டில் இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். அக்கம் பக்கத்தில் தேடினார். ஆனால் எந்த பலனும் இல்லை. பின்னர் இது குறித்து செட்டிப்பாளையம் போலீசில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவரை தவிக்க விட்டு கைக்குழந்முதையுடன் முன்னாள் காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News