உள்ளூர் செய்திகள்

மாத்திரை சாப்பிட்ட இளம் பெண் சாவு

Published On 2023-02-13 15:28 IST   |   Update On 2023-02-13 15:28:00 IST
  • வயிற்று வலி அதிகமானதால் செடியை பதபடுத்த பயன்படுத்தும் மாத்திரையை வயிற்று வலி மாத்திரை என நினைத்து சாப்பிட்டார்.
  • சிகிச்சை பலனின்றி பிரவீனா உயிரிழ்ந்தார்.

மாரண்டஅள்ளி,

தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே உள்ள சீரியனஅள்ளி கிராமத்தில் உள்ள அம்பேத்கார் காலணியில் வசித்து வந்தவர் பிரவீனா (25). இவருக்கு 8 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமாகியது. இவரது கனவர் சக்திவேல் 4 ஆண்டுகளுக்கு முன்னர் வாகன விபத்தில் இறந்து விட்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

பிரவீனா உடல் நல பிரச்சனையால் அவதிபட்டு வந்தார், இந்நிலையில் நேற்று காலை வயிற்று வலி அதிகமானதால் செடியை பதபடுத்த பயன்படுத்தும் மாத்திரையை வயிற்று வலி மாத்திரை என நினைத்து சாப்பிட்டார். மாத்திரை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே மயங்கி விழுந்ததால் குடும்பத்தார் மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழ்ந்தார். இது குறித்து மாரண்டஅள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News