உள்ளூர் செய்திகள்

கணவர் குடித்து விட்டு வந்ததால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்

Published On 2023-09-03 10:18 GMT   |   Update On 2023-09-03 10:18 GMT
  • தனக்கு தானே கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சி
  • கோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை

கோவை,

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கொள்ளுபாளை யத்தை சேர்ந்தவர் பிரதீப். இவரது ரம்யா (வயது 23). இவர்களுக்கு ஒரு வயதில் ஒரு மகன் உள்ளார்.

சம்பவத்தன்று வெளியே சென்ற பிரதீப் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது குடித்தார். பின்னர் போதை தலைக்கேறிய நிலையில் வீட்டிற்கு சென்றார்.

கணவர் குடித்து விட்டு வந்ததால் ஆத்திரம் அடைந்த ரம்யா அவரை கண்டித்தார். அப்போது கணவர்-மனை விக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனவே தனை அடைந்த ரம்யா வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தனக்கு தானே கழுத்தை அறுத்து தற்கொ லைக்கு முயன்றார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பிரதீப் தனது மனைவியை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு ரம்யாவை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இது குறித்து கோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News