உள்ளூர் செய்திகள்

கடலூர் முதுநகரில் இளம் பெண் திடீர் மாயம்போலீசார் விசாரணை

Published On 2023-02-18 15:14 IST   |   Update On 2023-02-18 15:40:00 IST
  • வீட்டில் இருந்து பள்ளிக்கு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வீட்டிற்கு வரவில்லை.
  • திடீரென்று இளம் பெண் காணாமல் சென்றது தெரிய வந்துள்ளது

கடலூர்:

கடலூர்முதுநகர் சேர்ந்த 23 வயது பெண் தனியார் பள்ளியில் கணக்காளராக பணிபுரிந்து வருகிறார். சம்பத்தன்று தனது வீட்டில் இருந்து பள்ளிக்கு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வீட்டிற்கு வரவில்லை.இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் இளம்பெண்ணை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில் காணாமல் போன இளம் பெண்ணுக்கும், வாலிபர் ஒருவருக்கும் பேஸ்புக்கில் பழக்கம் ஏற்பட்டதாகவும், இதன் மூலம் 2 பேரும் வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பேசி வந்த நிலையில் திடீரென்று இளம் பெண் காணாமல் சென்றது தெரிய வந்துள்ளது. இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிந்து இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News