உள்ளூர் செய்திகள்

கோவையில் கணவருக்கு தெரியாமல் பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்த இளம்பெண்

Published On 2022-09-28 10:34 GMT   |   Update On 2022-09-28 10:34 GMT
  • இளம்பெண் தனது கணவரிடம் வேலைக்கு செல்வதாக கூறினார்.
  • இளம்பெண் மசாஜ் சென்டருக்கு வரும் ஆண்களுடன் வெளியே சென்று உல்லாசமாக இருப்பது தெரியவந்தது

கோவை

கோவை கே.ஜி.சாவடியை சேர்ந்த 30 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கணவர் ரெயில்வே ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

நள்ளிரவு

இந்தநிலையில் இளம்பெண் தனது கணவரிடம் வேலைக்கு செல்வதாக கூறினார். இதனையடுத்து அவரை அவரது கணவர் வேலைக்கு செல்ல அனுமதித்தார். ஆனால் இளம்பெண் தினசரி நள்ளிரவில் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தார். இதனை அவரது கணவர் கண்டித்தார்.

இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. தினசரி வேலை முடிந்து வீட்டிற்கு வரும் இளம்பெண் மிகவும் சோர்வாக காணப்பட்டார். அவர் தனது குழந்தைகளையும் கவனிக்காமல் இருந்தார். இதனால் இளம்பெண்ணின் நடத்தையில் அவரது கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் தனது மனைவி எங்கே வேலை செய்கிறார். என்ன வேலைக்கு செல்கிறார் என்பதை கண்காணிக்க திட்டமிட்டார்.

பல ஆண்களுடன் உல்லாசம்

அதன்படி அவர் வேலைக்கு செல்லும் போது பின் தொடர்ந்து சென்று கண்காணித்தார். அப்போது இளம்பெண் தனது கணவருக்கு தெரியாமல் மசாஜ் சென்டரில் வேலை பார்ப்பதும், அவருக்கு பல ஆண்களுடன் கள்ளத்தொடர்பு இருப்பது ெதரிய வந்தது.

இளம்பெண் மசாஜ் சென்டருக்கு வரும் ஆண்களுடன் வெளியே சென்று உல்லாசமாக இருந்து விட்டு நள்ளிரவு வீட்டிற்கு வருவது தெரிய வந்தது.

ஓட்டம்

இதுகுறித்து அவர் இளம்பெண்ணிடம் கேட்டார். அப்போது கணவன்-மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்று இளம்பெண்ணின் கணவர் வழக்கம் போல வேலைக்கு சென்றார். வீட்டில் இருந்த இளம்பெண் கணவரிடம் கோபித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தார்.

இது குறித்து இளம்பெண்ணின் கணவர் கே.ஜி.சாவடி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம்பெண்ணை தேடி வருகிறார்கள். 

Tags:    

Similar News