உள்ளூர் செய்திகள்

கோவையில் கணவரின் கள்ளக்காதலியை தாக்கிய இளம்பெண்

Published On 2022-09-01 09:37 GMT   |   Update On 2022-09-01 09:37 GMT
  • கணவர் வீட்டிற்கு வராமல் கள்ளக்காதலி வீட்டில் இருந்ததால் ஆத்திரத்தில் தாக்கினார்.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை:

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அடுத்த கோவிந்தநாயக்கன்பா ளையத்தை சேர்ந்தவர் 38 வயது வாலிபர். கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார்.

இந்தநிலையில், வாலிபருக்கு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த 37 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர்.

இவர்களது கள்ளக்காதல் விவகாரம், வாலிபரின் மனைவிக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர் தனது கணவரை கண்டித்தார்.

ஆனால் அவர் அதனை கண்டு கொள்ளாமல் கள்ளக்காதலியுடனான பழக்கத்தை தொடர்ந்தார். அதன்பிறகு தனது வீட்டிற்கு வருவதையும் தவிர்த்த வாலிபர் எப்போதும் கள்ளக்காதலியின் வீட்டிலேயே இருந்தார்.

தனது கணவர் குடும்பம் நடத்துவதற்கு பணம் தராமல் எந்நேரமும் கள்ளக்காதலியின் வீட்டில் இருப்பதால் வாலிபர் மனைவி கோபம் அடைந்தார். கணவரின் கள்ளக்காதலியை சந்தித்து, இதற்கு ஒரு முடிவு கட்ட நினைத்த அவர், சம்பவத்தன்று, தனது கணவரின் கள்ளக்காதலி வீட்டிற்கு சென்றார்.

அங்கு அவரிடம், தனது கணவருடனான கள்ளக்காதலை கைவிட வேண்டும். இனி அவருடன் பேசக்கூடாது என கூறினார்.

அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர். இதில் ஆத்திரம் அடைந்த வாலிபரின் மனைவி, கள்ளக்காதலியை தகாத வார்த்தைகளால் திட்டி சரமாரியாக தாக்கினர். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது.

இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர், காயம் அடைந்த பெண்ணை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் பெரியநாயக்கன்பாளையம் போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News