உள்ளூர் செய்திகள்

சங்கராபுரம் அருகே தூக்கில் பிணமாக தொங்கிய வாலிபர்

Published On 2022-09-22 06:58 GMT   |   Update On 2022-09-22 06:58 GMT
  • மூங்கில்துறைப்பட்டு அருகே மல்லாபுரத்தில் உள்ள ஒரு வேப்பமரத்தில் ராஜா பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.
  • கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே பாவளம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா (வயது 42) கூலி தொழிலாளி. சம்பவத்தன்று இவர் தனது மனைவி பூங்கொடியிடம் வெளியே சென்றுவிட்டு வருவதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நி லையில் மூங்கில்துறைப்பட்டு அருகே மல்லாபுரத்தில் உள்ள ஒரு வேப்பமரத்தில் ராஜா பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.

இது குறித்த தகவலின் பேரில் வடபொன்பரப்பி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பசலைராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ராஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் ராஜா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரை யாரேனும் கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News