கோவையில் காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்
- காதல் விவகாரம் பெண்ணின் பெற்றோருக்கு தெரிய வரவே, அவர்கள் பெண்ணை கண்டித்தனர்.
- இளம்பெண்ணின் பெற்றோர் செல்வபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
கோவை,
கோவை செல்வபுரத்தை சேர்ந்தவர் 20 வயது பெண். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் செல்போனில் பேசியும் நேரில் சந்தித்தும் தங்களது காதலை வளர்த்து வந்தனர். இந்த காதல் விவகாரம் பெண்ணின் பெற்றோருக்கு தெரிய வரவே, அவர்கள் கண்டித்துள்ளனர்.
இந்நிலையில் சம்பவத்தன்று இளம் பெண்ணை வீட்டில் காணவில்லை. உடனடியாக அக்கம் பக்கத்தினர் உறவினர் வீடுகள் உள்பட பல இடங்களில் தேடினர். அப்போது வீட்டில் இளம்பெண் தன் கைப்பட எழுதியிருந்த கடிதம் கிடைத்தது.
அதில் தன்னை தேட வேண்டாம் என்று எழுதியிருந்தது. இதையடுத்து இளம்பெண்ணின் பெற்றோர் செல்வபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன பெண்ணை தேடி வருகிறார்கள்.