உள்ளூர் செய்திகள்

தங்கை கணவருடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்

Published On 2022-06-30 08:39 GMT   |   Update On 2022-06-30 08:39 GMT
  • தாரமங்கலம் அருகில் உள்ள கருக்கல்வாடி கிராமம் கரட்டூர் பகுதியில் தங்கை கணவருடன் இளம்பெண் ஓட்டம் பிடித்தார்.
  • இவர்களுக்கு திருமணம் முடிந்து 8 ஆண்டுகளாகியும் இதுவரை குழந்தைகள் இல்லை.

தாரமங்கலம்:

தாரமங்கலம் அருகில் உள்ள கருக்கல்வாடி கிராமம் கரட்டூர் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 33). இவருடைய மனைவி கோகிலா (27). இவர்களுக்கு திருமணம் முடிந்து 8 ஆண்டுகளாகியும் இதுவரை குழந்தைகள் இல்லை .

இந்நிலையில் தளவாய்பட்டியில் உள்ள கோகிலாவின் தங்கை கணவர் மோகன்ராஜ் (28) என்பவரோடு கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த விவரம் கணவர் நாகராஜுக்கு தெரியவந்ததால் இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத்தில் சண்டை நடந்து வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த 26-ந் தேதி முதல் கோகிலாவை காணவில்லை என்றும் மோகன்ராஜ் தனது மனைவியை கடத்தி சென்று விட்டதாகவும் நாகராஜ் தாரமங்கலம் போலீசில் புகார் அளித்தார். இதுபற்றி இன்ஸ்பெக்டர் தொல்காப்பியன், சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News