உள்ளூர் செய்திகள்

கஞ்சா விற்ற தொழிலாளி கைது

Published On 2023-02-06 14:38 IST   |   Update On 2023-02-06 14:38:00 IST
  • தொழிலாளியை கைது செய்தனர்.
  • சப்- இன்ஸ்பெக்டர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டார்.

கூடலூர்,

கூடலூர் புதிய பஸ் நிலையத்தில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பவுலோஸ் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டார். அப்போது சந்தேகப்படும்படி நின்றிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தார். அவரிடம் 15 கிராம் கஞ்சா இருப்பது தெரிய வந்தது. அதை உடனடியாக போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் கூடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து கூடலூர் மவுண்ட் பிளசண்ட் பகுதியைச் சேர்ந்த தொழிலாளி சிபின் நிக்கோலஸ் (வயது 32) என்பவரை கைது செய்தனர்.

Tags:    

Similar News