உள்ளூர் செய்திகள்

கோவில்பாளையம் அருகே கள்ளக்காதலனுடன் சென்ற பெண்

Published On 2023-08-13 08:48 GMT   |   Update On 2023-08-13 08:48 GMT
  • இளம்பெண் புதிய வாழ்க்கையை ஆரம்பிக்க போவதாக கணவரிடம் கூறி விட்டு செல்போன் இணைப்பை துண்டித்தார்.
  • கணவர் கோவில்பாளையம் போலீசில் புகார் செய்தார்.

கோவை,

கோவை கோவில்பாளையம் அருகே உள்ள குரும்பபாளையத்தை சேர்ந்தவர் 23 வயது இளம்பெண். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு டிரைவர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளார்.

இளம்பெண் அந்த பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். அப்போது இளம்பெண்ணுக்கு அந்த கம்பெனியில் வேலை செய்து வந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர்.

இந்த கள்ளக்காதல் விவகாரம் இளம்பெண்ணின் கணவருக்கு தெரிய வரவே அவர் தனது மனைவியை கண்டித்தார். இதன் காரணமாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக இளம்பெண்ணின் கணவர் அவரிடம் கோபித்துக்கொண்டு கோவில்பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டில் வசித்து வந்தார்.

சம்பவத்தன்று கணவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட இளம்பெண் தன்னை தேட வேண்டாம் எனவும், புதிய வாழ்க்கையை ஆரம்பிக்க போவதாக கூறி விட்டு செல்போன் இணைப்பை துண்டித்தார். பின்னர் அவர் தனது மகனுடன் கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்தார்.

இது குறித்து இளம்பெண்ணின் கணவர் மாயமான தனது மனைவி, மகனை கண்டுபிடித்து தரும்படி கோவில்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கள்ளகாதலனுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News