உள்ளூர் செய்திகள்

மயிலம் அருகே வேன் மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் பலி :கணவருக்கு தீவிர சிகிச்சை

Published On 2023-06-08 07:39 GMT   |   Update On 2023-06-08 07:39 GMT
  • பெரியதம்பி அதே பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்.
  • வேன் இவர்களது மோட்டார் சைக்கிளில் வேகமாக மோதியது.

விழுப்புரம்:

மயிலம் கீழ்எடையாலம் பகுதியை சேர்ந்தவர் பெரியதம்பி. இவரது மனைவி செல்வமணி (வயது 50) பெரியதம்பி அதே பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை பெரியதம்பி தனது மோட்டார் சைக்கிளில் மனைவி செல்வமணியுடன் கீழ்எடையாலம் பகுதியில் இருந்து கூட்டேரிபட்டிற்கு கடைக்கு தேவையான பல சரக்கு வாங்குவதற்கு சென்றனர். 

இதனை யடுத்து பலசரக்கு வாங்கி விட்டு மோட்டார் சைக்கிளில் கூட்டேரிபட்டி லிருந்து கீழ்எடையாலத்திற்கு வந்தனர். அப்போது திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலை யில் வந்த போது பின்னால் வந்த வேன் இவர்களது மோட்டார் சைக்கிளில் வேகமாக மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கி ளிலிருந்து தூக்கி வீசப்பட்ட பெரியதம்பி, இவரது மனைவி செல்வமணியை அருகில் இருந்த வர்கள் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அப்போது 108 ஆம்புலன்சில் செல்லும் வழியிலே செல்வமணி பரிதாப மாக உயிர் இழந்தார். விபத்தில் படுகாயம் அடைந்த பெரிய தம்பிக்கு முண்டி யம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த மயிலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் இறந்த செல்வமணியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அதே ஆஸ்பத்திரியில் போலீசார் சேர்த்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News