உள்ளூர் செய்திகள்

பலியான நிர்மலா

காட்டுமன்னார்கோவில் அருகே சுவர் இடிந்து பெண் பலி

Published On 2022-11-18 08:22 GMT   |   Update On 2022-11-18 08:22 GMT
  • கடந்த சில நாட்களாக காட்டுமன்னார்கோவில் பகுதியில் பலத்தமழை பெய்தது.
  • இடிபாடுகளுக்குள் சிக்கிய 3 பேரையும் மீட்டு சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவகல்லூரி ஆஸ்பத்தி ரியில் சேர்த்தனர்.

கடலூர்:  

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள டி.புத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட கொத்தங்குடி கிராமத்தை சேர்ந்தவர் சோமசுந்தரம். அவரது மனைவி நிர்மலா (வயது 49). இவர்களது மகன் அய்யப்பன். கடந்த சில நாட்களாக காட்டுமன்னார்கோவில் பகுதியில் பலத்தமழை பெய்தது. இதன் காரண மாக சோமசுந்தரத்தின் வீடு மழையில் நனைந்திருந்தது. சம்பவத்தன்று சோமசுந்தரம் தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கினார்.

அப்போது கனமழை காரணமாக வீட்டுசுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதில் 3 பேரும் இடிபாடு களுக்குள் சிக்கினர். அவர்கள் வேதனையால் அலறிதுடித்தனர். சத்தம்கேட்டு அக்கம் பக்கம் உள்ள வர்கள் ஓடி வந்தனர். இடிபாடுகளுக்குள் சிக்கிய 3 பேரையும் மீட்டு சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவகல்லூரி ஆஸ்பத்தி ரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நிர்மலா நேற்று நள்ளிரவு இறந்தார். மற்ற 2 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுகுறித்து டி.புத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News