உள்ளூர் செய்திகள்

சேலையில் தீப்பிடித்து பெண் பலி

Published On 2023-08-05 09:52 GMT   |   Update On 2023-08-05 09:52 GMT
  • படுகாயமடைந்தவரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர்:

தஞ்சை அடுத்த மாரியம்மன்கோயில் அன்னை முத்தம்மாள் நகரை சேர்ந்தவர் செண்பகராஜா. இவரது மனைவி மகேஸ்வரி (வயது 30). சம்பவத்தன்று இவர் வீட்டில் மண்எண்ணெய் அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது சேலையில் எதிர்பாராதவிதமாக தீப்பற்றியது.

இதில் பலத்த தீக்காயமடைந்த மகேஸ்வரியை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மகேஸ்வரி இறந்தார்.

இது குறித்து தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News