உள்ளூர் செய்திகள்

 மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட பொதுக்குழு கூட்டம்  நடைபெற்ற போது எடுத்தபடம்.

செங்கோட்டையில் இருந்து மும்பைக்கு வாராந்திர ரெயில் இயக்க வேண்டும் - கடையநல்லூர் த.மு.மு.க. பொதுக்கூட்டத்தில் தீர்மானம்

Published On 2022-09-05 09:39 GMT   |   Update On 2022-09-05 09:39 GMT
  • மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட பொதுக்குழு கூட்டம் மாவட்டத் தலைவர் யாகூப் தலைமையில் நடைபெற்றது.
  • அரசு கலைக்கல்லூரி அருகில் மாவட்ட சட்டக்கல்லூரி அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கடையநல்லூர்:

கடையநல்லூரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட பொதுக்குழு கூட்டம் மாவட்டத் தலைவர் யாகூப் தலைமையில் நடைபெற்றது.

த.மு.மு.க மாவட்ட செயலாளர் முகமது பாசித், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் பஷீர்ஒலி, பொருளாளர் அப்துல்காதர், மாவட்ட துணைத் தலைவர் அப்துல் ரஹ்மான், மாவட்ட செயலாளர்கள் மஜீத், ஷேக், உமர்கத்தாப், அபுதாஹிர், ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் முகமது பஸ்லி நன்றி கூறினார்

கூட்டத்தில் கடையநல்லூர் அரசு கலைக்கல்லூரி அருகில் மாவட்ட சட்டக்கல்லூரி, வேளாண்கல்லூரி மற்றும் சித்தா பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும். கடையநல்லூர் அட்டைகுளத்தில் உழவர் சந்தை அமைக்க வேண்டும், கொல்லம்- திருமங்கலம் நான்கு வழிச்சாலையை விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாத வகையில் மாற்று வழியில் அமைக்க வேண்டும்.

செங்கோட்டையில் இருந்து மும்பைக்கு வாராந்திர ரெயில் இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags:    

Similar News