உள்ளூர் செய்திகள்

லாட்டரி சீட்டு விற்ற வாலிபர் கைது

Published On 2022-10-18 14:07 IST   |   Update On 2022-10-18 14:07:00 IST
  • லாட்டரி சீட்டு விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
  • அவரிடமிருந்து 70 லாட்டரி சீட்டு பறிமுதல் செய்தனர்.

கள்ளக்குறிச்சி:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மவுலியா பகுதியைச் சேர்ந்த சேக் அப்துல்லா (வயது 45) இவர் இன்று காலை திருநாவலூர் அருகே மடப்பட்டு பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்தார். அப்போது ரோந்து பணியில் வந்த திருநாவலூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் லாட்டரி சீட்டு விற்பனை செய்த சேக் அப்துல்லாவை கையும் கலவுமாக பிடித்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு அப்துல்லாவை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 70 லாட்டரி சீட்டு பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News