பேரூர் அருகே பெட்ரோலை ஊற்றி தீக்குளித்த வாலிபர்
- மனைவி மாயமானதால் வேதனை
- பேரூர் போலீசார் தீவிர விசாரணை
கோவை,
கோவை பேரூர் அருகே உள்ள காளம்பாளையத்தை சேர்ந்தவர் தர்மன் (வயது 28).
சம்பவத்தன்று இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே கருத்துவேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த மனைவி தனது கணவரிடம் கோபித் துக்கொண்டு வெளியே சென்றார். இதனையடுத்து தர்மன் தனது மனைவி அந்த பகுதியில் உள்ள மாமியார் வீட்டிற்கு தான் சென்று இருப்பார் என நினைத்து அங்கு சென்று பார்த்தார். ஆனால் அவர் அங்கு இல்லை. பின்னர் அருகே உள்ள உறவினர் வீடுகளிலும் சென்று தேடி பார்த்தார். ஆனால் மனைவியை கண்டு பிடிக்க முடிய வில்லை.
இதனால் மனவேதனை அடைந்த தர்மன் பெட்ரோலை அவரது முகத்தில் ஊற்றி தீ பற்ற வைத்தார். தீ மளமளவென அவரது உடல் முழுவதும் பரவியது.
இதில் வலி தாங்க முடியாமல் அவர் சத்தம் போட்டார். இதனை கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று தர்மனை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இது குறித்து பேரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.