உள்ளூர் செய்திகள்

பஸ் கண்ணாடி உடைக்கப்பட்டிருப்பதை படத்தில் காணலாம்.

திருவெண்ணைநல்லூர் அருகே பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபக்கு வலைவீச்சு

Published On 2023-02-19 07:32 GMT   |   Update On 2023-02-19 07:32 GMT
  • இவர் ஆனத்தூரில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க சென்றுள்ளார்.
  • இந்த சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

விழுப்புரம்:

திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள ஆனத்தூர் கிராமத்தைச் சேர்ந்த துளசி மகன் நாகராஜ் (வயது 42). மனநலம் பாதிக்கப்பட்டவர். இவர் ஆனத்தூரில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க சென்றுள்ளார். அங்கு பணம் வரவில்லை. வங்கி ஊழியர்களிடம் பணம் ஏன் வரவில்லை என்று கூறி பிரச்சினை செய்து விட்டு அரசூர் - பண்ருட்டி சாலையில் ரகளையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது விழுப்பு ரத்தில் இருந்து அரசூர் வழியாக பண்ருட்டி நோக்கி வந்த அரசு டவுன் பஸ்சை வழிமறித்து தகராறில் ஈடுபட்டார். பஸ் கண்ணாடியை உடைத்து பஸ் டிரைவர் கண்டக்டரை தாக்கினார்.

பஸ் செல்லாதவாறு வயர்களையும் பிடுங்கி எறிந்தார். இதனால் இந்த சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது இது குறித்து தகவல் அறிந்த திருவெண்ணைநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர் ராபர்ட் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்ததை பார்த்த நாகராஜ் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இது தொடர்பான புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய நாகராஜை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News