உள்ளூர் செய்திகள்

கோவையில் காதல் தகராறில் வாலிபருக்கு கத்திக்குத்து

Published On 2023-03-02 14:48 IST   |   Update On 2023-03-02 14:48:00 IST
  • ஹரிகரன் தந்தையின் மெஸ்சில் வேலை செய்து வருகிறார்.
  • ஹரிகரனை தாக்கி தலையில் கத்தியால் குத்தினார்.

கோவை,

கோவை பீளமேடு அருகே உள்ள அண்ணா நகரை சேர்ந்தவர் ராஜசேகர். இவரது மகன் ஹரிகரன் (வயது 22). இவர் தனது தந்தையின் மெஸ்சில் வேலை செய்து வருகிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு ஆவாரம்பாளையத்தை சேர்ந்த இளம்பெண் மீது காதல் ஏற்பட்டது. அந்த இளம்பெண் ஏற்கனவே விக்கி என்ற விக்னேஷ் என்பவரை காதலித்து வந்தார். ஹரிகரன் தனது காதலி பின்னால் சுற்றுவது விக்கிக்கு பிடிக்கவில்லை. இதன் காரணமாக 2 பேருடன் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனை அறிந்த இளம்பெண் தனது காதலன் விக்கியுடன் பேசுவதையும் பழகுவதையும் தவிர்த்து வந்தார். தனது காதலி தன்னுடன் பேசாததற்கு ஹரிகரன் தான் காரணம் என விக்கி நினைத்தார். இதனால் அவர் மீது ஆத்திரத்தில் இருந்தார்.

சம்பவத்தன்று ஹரிகரன் வீட்டில் இருந்த போது விக்கி தனது நண்பர்கள் 2 பேரும் அத்துமீறி உள்ளே நுழைந்தார். பின்னர் தகாத வார்த்தைகள் பேசி ஹரிகரனை தாக்கி தலையில் கத்தியால் குத்தினார். இதனை பார்த்து ஹரிகரனின் தந்தை தடுக்க சென்றார். அவரையும் இரும்பு கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து 3 பேரும் அங்கு இருந்து தப்பிச் சென்றனர்.ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய தந்தை, மகன் இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இது குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து காதல் தகராறில் தந்தை மகன் ஆகியோரை கத்தியால் குத்திய விக்கி உள்பட 3 பேரை தேடி வருகிறார்கள். 

Tags:    

Similar News