விழுப்புரம் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது
- விழுப்புரம் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
- தப்பியோடிய முருகையனை வலை வீசி தேடி வருகின்றனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே பா.வில்லியனூர் பகுதியில் கஞ்சா விற்பனை நடை பெறுவதாக விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஸ்ரீ நாதாவுக்கு தகவல் வந்தது. இதைத்தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின் பேரில் டி.எஸ்.பி. பார்த்திபன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது அங்கு 2 வாலிபர்கள் கஞ்சா விற்பனை செய்வது தெரிய வந்தது. உடனே போலீசார் அவர்களை பிடிக்க முற்பட்ட போது அதில் ஒரு நபர் தப்பி ஓடிவிட்டான் மற்றொருவன் பிடிபட்டான். உடனே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசார ணையில் அதே பகுதியைச் சேர்ந்த விஜயரங்கன் மகன் தினேஷ் (வயது 19) மற்றும் முருகையன் என்பது தெரிய வந்தது. உடனே போலீ சார் தினேஷை கைது செய்தனர். தப்பியோடிய முருகை யனை வலை வீசி தேடி வருகின்றனர். மேலும் தினேஷிட மிருந்து இருந்து 2000 பணம்,செல்போன் மற்றும் 100 கிராம் கஞ்சா வை போலீசார் பறிமுதல் செய்தனர்.