உள்ளூர் செய்திகள்

மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் பலி

Published On 2022-10-25 14:56 IST   |   Update On 2022-10-25 14:56:00 IST
  • கன்றுக்குட்டி குறுக்கே வந்ததால் விபத்து.
  • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஊட்டி:

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்த சிவானந்தா காலனி பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 38). அவர் சந்திரசேகர் (52) என்பவருடன் தனது மோட்டார் சைக்கிளில் கீழ் கோத்தகிரி பகுதிக்கு வந்தார்.

அப்போது அங்கு மேய்ந்து கொண்டிருந்த கன்று குட்டி ஒன்று குறுக்கே வந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சிவக்குமார் திடீரென பிரேக் பிடித்தார். மோட்டார் சைக்கிளில் நிலை தடுமாறி பின்னால் அமர்ந்து இருந்த சந்திரசேகர் தூக்கி வீசப்பட்டார். இதில் அவர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

காயம் அடைந்த சிவக்குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சேலூர்மட்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News