உள்ளூர் செய்திகள்
மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் சாவு
- எதிரே வந்த ஸ்கூட்டர் ஒன்று அவர் மீது எதிர்பாராத விதமாக மோதியது.
- தூக்கி வீசப்பட்ட கங்கய்யாகுரிகர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த மத்திகிரி பகுதியைச் சேர்ந்தவர் கங்கய்யாகுரிகர் (வயது38). இவர் ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்றார்.
அப்போது எதிரே வந்த ஸ்கூட்டர் ஒன்று அவர் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கங்கய்யாகுரிகர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த அட்கோ போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு வந்து கங்கய்யாகுரிகரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.