உள்ளூர் செய்திகள்

பரமத்திவேலூர் அருகே வாலிபர் திடீர் சாவு

Published On 2023-04-19 10:12 GMT   |   Update On 2023-04-19 10:12 GMT
  • சரவணன் (வயது 37). இவர் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.
  • இந்நிலையில் சரவணன் கள்ளிப்பாளையம் பகுதியில் மது அருந்திவிட்டு படுத்திருந்துள்ளார். ஆனால் வெகு நேரமாகியும் அவர் எழவில்லை.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா அண்ணா நகர் அருகே கள்ளிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜன். இவரது மகன் சரவணன் (வயது 37). இவர் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர்.

இந்நிலையில் சரவணன் கள்ளிப்பாளையம் பகுதியில் மது அருந்திவிட்டு படுத்திருந்துள்ளார். ஆனால் வெகு நேரமாகியும் அவர் எழவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர்,அருகில் சென்று பார்த்த போது, சரவணன் இறந்த நிலையில் கிடந்தது தெரியவந்தது.

இது குறித்து பரமத்திவேலூர் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடம் வந்து பிரேதத்தை கைப்பற்றி, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News