உள்ளூர் செய்திகள்

கடலூரில் 30 அடி உயர கட்டிடத்தின் மேல் இருந்து கீழே விழுந்த வாலிபர் சாவு

Published On 2023-06-15 07:52 GMT   |   Update On 2023-06-15 07:52 GMT
  • கட்டிடத்தின் மாடியில் இன்டர்நெட் கேபிள் சரி செய்யும் பணியில் வாலிபர் ஒருவர் ஈடுபட்டு வந்தார்.
  • கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர்:

கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் இன்று காலை ஒரு கட்டிடத்தின் மாடியில் இன்டர்நெட் கேபிள் சரி செய்யும் பணியில் வாலிபர் ஒருவர் ஈடுபட்டு வந்தார். அப்போது அந்த வாலிபர் மீது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் நிலை தடுமாறி 30 அடி உயரம் கொண்ட மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதை பார்த்த அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள் உடனடியாக அந்த வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு வாலிபரை பரிசோதனை செய்த டாக்டர் இவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

இதுபற்றி கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் விசாரணை நடத்தியதில், கடலூர் முதுநகர் சேடப்பாளையம் பகுதியை சேர்ந்த விமல் (வயது 25) என்பதும் தனியார் நெட்வொர்க் கம்பெனியில் பணிபுரிந்து வந்ததாக தெரிய வந்தது. இதுகுறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக ஏற்படுத்தியது.

Tags:    

Similar News