உள்ளூர் செய்திகள்

திருவெண்ணைநல்லூர் அருகே விபத்தில் சிகிச்சை பெற்ற வாலிபர் சாவு

Published On 2023-08-30 15:14 IST   |   Update On 2023-08-30 15:14:00 IST
  • விழுப்புரத்திற்கு சென்று விட்டு மீண்டும் செரலாபட்டிற்கு சென்றார்.
  • மேல்சிகிச்சைக்கு புதுவை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

கள்ளக்குறிச்சி: 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் செரலாபட்டு பகுதியை சேர்ந்தவர் பாவாடை (வயது 50). தொழிலாளி இவர் கடந்த 28-ந்தேதி தனது மோட்டார் சைக்கிளில் விழுப்புரத்திற்கு சென்று விட்டு மீண்டும் செரலாபட்டிற்கு சென்றார். அப்போது சென்னை-திருச்சி சாலை இருவேல்பட்டு அருகே வழியாக மோட்டார் சைக்கிள் வந்தபோது எதிரே வந்த தனியார் வாகனம் மோதி பலத்த படுகாயம் அடைந்தனர். விபத்தில் படுகாயம் அடைந்த பாவாடையை திருவெண்ணை நல்லூர் போலீசார் மீட்டு சிகிச்சைக்கு முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்கு புதுவை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பாவாடை உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த திருவெண்ணைநல்லூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News