உள்ளூர் செய்திகள்

பண்ருட்டி அருகே வாலிபர் மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை

Published On 2023-09-07 09:13 GMT   |   Update On 2023-09-07 09:13 GMT
  • பவுன்ராஜ் ஏரிக்கரைக்கு சென்று அங்கிருந்த வேப்பமரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்
  • பவுன்ராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கடலூர்:

பண்ருட்டி அடுத்த பண்டரக்கோட்டை தோப்பு தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் பவுன்ராஜ் (வயது 26), இன்று காலை மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் இருந்தவர்களிடம் தகராறில் ஈடுபட்டார். இதனையடுத்து ஏரிக்கரைக்கு சென்று அங்கிருந்த வேப்பமரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து புதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.தகவல் அறிந்த புதுப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மரத்தில் தற்கொலை செய்து கொண்ட பவுன்ராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News