உள்ளூர் செய்திகள்

படிப்பு செலவுக்கு பணம் இல்லாததால் வக்கீலுக்கு படித்து வந்த மாணவி தற்கொலை

Published On 2022-10-22 14:40 IST   |   Update On 2022-10-22 14:40:00 IST
  • சம்பவத்தன்று சந்தியா தனது தாய் உமாரா ணியிடம் படிப்பு செலவிற்கு பணம் கேட்டுள்ளார்‌.
  • திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர்:

கடலூர் பாதிரிக்குப்பம் சேர்ந்தவர் சங்கர். இவரது மகள் சந்தியா (வயது 24). விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு எல்.எல்.பி படித்து வந்தார். சம்பவத்தன்று சந்தியா தனது தாய் உமாராணியிடம் படிப்பு செலவிற்கு பணம் கேட்டுள்ளார்‌. அப்போது அவரது தாய் உமாராணி பணம் என்னிடம் இல்லை நாளை தருகிறேன் என கூறினார்‌. இதனால் மன வருத்தத்தில் இருந்த சந்தியா எலி பேஸ்ட் சாப்பிட்டு தனது தாய் உமாராணிடம் தெரிவித்தார்.

அதிர்ச்சி அடைந்த உமாராணி உடனடியாக தனது மகள் சந்தியாவை சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்க ப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சந்தியா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News