உள்ளூர் செய்திகள்
கடலூர் அருகே கல்லூரிக்கு சென்ற மாணவி திடீர் மாயம்
- கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வரும் 20 வயது கல்லூரி மாணவி சம்பவத்தன்று வழக்கம் போல் கல்லூரிக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார்.
- அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர்கள் கல்லூரி மாணவியை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
கடலூர்:
கடலூர் பாதிரிக்குப்பத்தை சேர்ந்த தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வரும் 20 வயது கல்லூரி மாணவி சம்பவத்தன்று வழக்கம் போல் கல்லூரிக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் கல்லூரிக்கு சென்ற மாணவி மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர்கள் கல்லூரி மாணவியை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர்.