உள்ளூர் செய்திகள்

மாடியில் இருந்து தவறி விழுந்த வடமாநில வாலிபர் சாவு

Published On 2023-05-14 15:31 IST   |   Update On 2023-05-14 15:31:00 IST
  • தங்கியிருக்கும் அறை 3-வது மாடிக்கு செல்லும்போது செல்போன் பேசிகொண்டே சென்றார்.
  • பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி,

அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் நந்துராய் (வயது24). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் சிப்காட் பகுதியில் ஒரு அறையை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்து வேலைக்கு சென்று வந்தார்.

இந்த நிலையில் நந்துராய் சம்பவத்தன்று காலையில் தங்கியிருக்கும் அறை 3-வது மாடிக்கு செல்லும்போது செல்போன் பேசிகொண்டே சென்றார். அப்போது அவர் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News