சேலத்தில் இறந்த மகனின் உடலுடன் வசித்து வந்த தாய்
- சேலம் பள்ளப்பட்டி சாமிநாதபுரம் மருதநாயகம் தெருவை சேர்ந்தவர் உமா சங்கர் (வயது 45). இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.
- கடந்த 2 நாட்களாக வெளியே வராமல் வீட்டின் படுக்கையிலேயே இறந்த நிலையில் கிடந்துள்ளார் என்பது தெரிய வந்தது.
சேலம்:
சேலம் பள்ளப்பட்டி சாமிநாதபுரம் மருதநாயகம் தெருவை சேர்ந்தவர் உமா சங்கர் (வயது 45). இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.
கருத்து வேறுபாடு காரண மாக இவரது மனைவி கடந்த 15 வருடங்களுக்கு முன்பு பிரிந்து சென்றுவிட்டார். இதனால் உமாசங்கர் தனது தாய் ராஜேஸ்வரி உடன் வசித்து வந்தார். ராஜேஸ்வரி சற்று மனநலம் பாதித்தவர் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், சம்பவத்தன்று இவர்களது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசவே, அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் பள்ளப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சென்று பார்த்தபோது உமாசங்கர் படுக்கையில் பிணமாக கிடந்தார்.
உமா சங்கரின் உடலை மீட்ட போலீசார், சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரில் முதற்கட்ட விசாரணையில், உமாசங்கர் கடந்த 2 நாட்களாக வெளியே வராமல் வீட்டின் படுக்கையிலேயே இறந்த நிலையில் கிடந்துள்ளார் என்பது தெரிய வந்தது.
மகன் இறந்தது கூட தெரியாமல் கடந்த 2 நாட்களாக ராஜேஸ்வரி வீட்டில் இருந்தது அந்தப் பகுதியில் உள்ளவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதை குறித்து பள்ளப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.சேலம் பள்ளப்பட்டி சாமிநாதபுரம் மருதநாயகம் தெருவை சேர்ந்தவர் உமா சங்கர் (வயது 45). இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.