உள்ளூர் செய்திகள்

 சிதம்பரம் நடராஜர் கோவிலில் வைக்கப்பட்டுள்ள கொலுவை படத்தில் காணலாம்.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிரம்மாண்டமான நவராத்திரி கொலு

Published On 2022-09-27 07:47 GMT   |   Update On 2022-09-27 07:47 GMT
  • சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு 30 அடி உயரத்தில் பிரமாண்டமான நவராத்திரி கொலு வைக்கப்பட்டது.
  • பிரமாண்டமான கொலுவை திரளான மக்கள் வந்து பார்த்து வணங்கி செல்கின்றனர்.

கடலூர்:

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு 30 அடி உயரத்தில் பிரமாண்டமான நவராத்திரி கொலு வைக்கப்பட்டது. நடராஜர் கோவிலில் கல்யாண மண்டபத்தில் நவராத்திரி கொலு உற்சவத்தை முன்னிட்டு 30 அடி உயரத்தில் 30 அடி அகலத்தில் 21 படிகளுடன் பிரமாண்டமான கொலு அமைக்கப்பட்டுள்ளது. நேற்று தொடங்கிய இந்த கொலு வருகிற 4-ந் தேதி வரை நடைபெறுகிறது. 9 நாட்களும் இரவு 9 மணிக்கு கொலு அமைக்கப்பட்டுள்ள இடத்திற்கு முன்பு உள்ள வெள்ளி ஊஞ்சலில் சிவகாமசுந்தரி அம்பாளான, நவராத்திரி அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவமும், தீபாராதனையும் நடைபெறும்.

கொலுவில் நடராஜர் முதல் சிறிய பொம்மைகள் வரை சுமார் 2,500 ஆயிரம் பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன. பிரமாண்டமான கொலுவை திரளான மக்கள் வந்து பார்த்து வணங்கி செல்கின்றனர். நவராத்திரி கொலு குறித்து கோயில் பொதுதீட்சிதர்களில் ஒருவரான வெங்கடேச தீட்சிதர் தெரிவித்தது: ஒரறிவு முதல் ஆறறிவு மனிதன் வரை பரினாம வளர்ச்சிகளை வணங்கும் வன்னம் இந்த கொலு வைத்து வணங்கப்படுகிறது என தெரிவித்தார்.

Tags:    

Similar News