உள்ளூர் செய்திகள்

ஆனைமலை அருகே கள்ளக்காதலனுடன் ஓட்டம்பிடித்த பெண்

Published On 2023-09-23 09:07 GMT   |   Update On 2023-09-23 09:07 GMT
  • திருமணம் ஆகி கணவர் மற்றும் குழந்தைகள் உள்ளனர்
  • திருமணம் ஆகாத கள்ளக்காதலுடன் ஓட்டம்

கோவை,

ஆனைமலையை சேர்ந்த வர் 45 வயது இளம்பெண். இவர் அங்குள்ள ரெஸ்டாரண்டில் சமையல் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.இவருக்கு திருமணம் ஆகி கணவர் மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் இளம்பெண்ணுக்கு அவருடன் சமையல் தொழிலாளியாக வேலை பார்த்த திருமணமாகாத வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இளம்பெண் அவரது கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் வாலிபரை அங்கு அழைத்து அவருடன் ஜாலியாக இருந்து வந்தார்.

இந்த கள்ளக்காதல் விவகாரம் இளம்பெண்ணின் கணவருக்கு தெரிய வரவே கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

சம்பவத்தன்று கணவரிடம் கோபித்துக் கொண்டு வெளியே சென்ற இளம்பெண் தனது கள்ளக்காதலுடன் ஓட்டம் பிடித்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது கணவர் தனது மனைவியை மீட்டு தரும்படி ஆனைமலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார் புகார் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம் பெண்ணை தேடி வருகின்றனர்

Tags:    

Similar News