கோவில்பாளையம் அருகே 15 வயதில் திருமணம் செய்த சிறுமி திடீர் தற்கொலை
- வேலைக்கு செல்ல கணவர் அனுமதிக்காததால் வேதனை
- சாணிப்பவுடரை கரைத்து குடித்து உயிரை மாய்த்து கொண்டார்
கோவை,
கோவில்பாளையம் அருகே உள்ள வெள்ளா னைப்பட்டி மகாசக்தி நகரை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி வசந்தபி ரியா (வயது17). இவருக்கு அவரது பெற்றோர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து வைத்தனர். 1 வயதில் ஒரு மகன் உள்ளார்.
வசந்த பிரியா தனது கணவரிடம் வேலைக்கு செல்கிறேன் என அடிக்கடி கூறி வந்தார். ஆனால் அவரது கணவர் வேலைக்கு அனுப்ப மறுத்து விட்டார். இதன் காரணமாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
தீபாவளிக்கு முதல் நாளன்று மகளின் வீட்டிற்கு வந்த பெற்றோர் யாரிடமும் சொல்லாமல் வசந்த பிரியாவை அவர்களது வீட்டிற்கு அழைத்து சென்றனர்.
தீபாவளி முடிந்ததும் வசந்தபிரியா வீட்டிற்கு திரும்பினார். அவரிடம் கணவரின் தாயார் ஏன் சொல்லாமல் சென்றாய் என கண்டித்தார். இதனால் மனவேதனை அடைந்த வசந்த பிரியா வீட்டில் உள்ள அறைக்கு சென்று சாணிப்பவுடரை கரைத்து குடித்தார். மயங்கிய நிலையில் இருந்த அவரை அவரது கணவர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.
அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் வசந்த பிரியா பரிதாபமாக இறந்தார் .இது குறித்து கோவில்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.