உள்ளூர் செய்திகள்

விருத்தாசலம் அருகே பால்கடை உரிமையாளரை அரிவாளால் சரமாரியாக வெட்டிய கும்பல்

Published On 2023-05-29 13:42 IST   |   Update On 2023-05-29 13:42:00 IST
  • ராம்குமார் பால்கடை வைத்து நடத்தி வருகிறார்.
  • மர்ம கும்பல் ராம்குமாரை சரமாரியாக தாக்கினர்.

கடலூர்:

விருத்தாசலம் பெரியார் நகரை சேர்ந்தவர் ராம்கு மார் (வயது 22) இவர் அதே பகுதியில் பால்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு அந்த கடைக்கு 4 பேர் கொண்ட மர்ம கும்பல் வந்தனர். அவர்கள் ராம்குமாரை சரமாரியாக தாக்கி அவர்கள் வைத்திருந்த அரிவாளால் சரமாரியா வெட்டினர். இதன் பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து விருத்தாசலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த விருத்தா சலம் ேபாலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அரிவாளால் வெட்டியதில் படுகாயம் அடைந்த ராம்குமாரை மீட்டு விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

மேலும் இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிவு செய்து பால்கடை நடத்தி வரும் ராம்குமாரை மர்ம கும்பல் அரிவாளால் வெட்டி தாக்குதல் நடத்தியதற்கான காரணம் என்ன அந்த கும்பலுக்கும் ராம்குமா ருக்கும் முன்விரோத தகராறு இருந்துள்ளதா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் போலீசார் அந்த கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News