உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடியில் கார் மோதி நிதி நிறுவன அதிபர் பலி

Published On 2023-06-03 08:06 GMT   |   Update On 2023-06-03 08:06 GMT
  • பிரேமானந்த் பொட்டல்காடு விலக்கு பகுதியில் சென்ற போது எதிரே வந்த கார் அவர் மீது மோதியது.
  • முத்தையாபுரம் போலீசார், அவரை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி கீழத்தெருவை சேர்ந்தவர் பிரேமானந்த் (வயது45). இவர் நிதி நிறுவனம் நடத்தி வந்தார்.

கார் மோதல்

தற்போது இவர் குடும்பத்துடன் தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் ஆழ்வார்திரு நகரிக்கு சென்றார். பின்னர் மீண்டும் இரவில் தூத்துக்கு டிக்கு திரும்பினார். அவர் பொட்டல்காடு விலக்கு பகுதியில் சென்ற போது எதிரே வந்த கார் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயமடைந்தார்.

தசகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற முத்தையாபுரம் போலீசார், அவரை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வை த்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரி ழந்தார்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News