உள்ளூர் செய்திகள்

வால்பாறையில் சிறுமியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய டிரைவர்

Published On 2023-07-29 14:53 IST   |   Update On 2023-07-29 14:53:00 IST
  • சிறுமியை டாக்டர்கள் பரிசோதனை செய்த போது அவர் 4 மாத கர்ப்பமாக இருந்தார்.
  • சிறுமியின் தாய் ஷேக்கல்முடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

கோவை,

கோவை மாவட்டம் வால்பாறையை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவருக்கு அதே பகுதியை சேர்ந்த டிரைவர் கண்ணன் (வயது 26) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

சம்பவத்தன்று சிறுமியின் பெற்றோர் வேலைக்கு சென்று இருந்தனர். அவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது கண்ணன் சிறுமியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தார். பின்னர் அவர் சிறுமியை ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்தார்.

கடந்த சில நாட்களாக சிறுமி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனையடுத்து அவரை அவரது தாய் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு சிறுமியை டாக்டர்கள் பரிசோதனை செய்த போது அவர் 4 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.

இதனை கேட்டு சிறுமியின் தாய் அதிர்ச்சியடைந்தார். அவர் தனது மகளிடம் கர்ப்பத்துக்கு யார் காரணம் என விசாரித்தார். அப்போது சிறுமி தன்னை டிரைவர் கண்ணன் ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்தாக கூறினார்.

இது குறித்து சிறுமியின் தாய் ஷேக்கல்முடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் தலைமறைவாக இருந்த கண்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News