உள்ளூர் செய்திகள்

தீப்பற்றி எரியும் மோட்டார் சைக்கிள்கள்.

டீக்கடையில் சிலிண்டர் வெடித்து தீவிபத்து; இருசக்கர வாகனங்கள் எரிந்து நாசம்

Published On 2022-08-18 09:41 GMT   |   Update On 2022-08-18 09:41 GMT
  • மாஸ்டர் கவனிப்பதற்குள் கியாஸ் அழுத்தம் காரணமாக ரெகுலேட்டர் சிதறி தீப்பற்ற தொடங்கியது.
  • கடைக்குள் இருந்தவர்கள், டீ குடித்து கொண்டிருந்தவர்கள் அங்கு இருந்து தப்பி ஓடினர்.

தஞ்சாவூர்:

தஞ்சை கீழவாசல் நான்குவழி சாலை சந்திப்பில் பாலமுருகன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் கண்ணையன் என்பவர் டீ ஸ்டால் வைத்துள்ளார்.

கடை முன்பு சிலிண்டர் அடுப்பில் வைத்து பலகாரம் சுடும் போது எதிர்பாராதவிதமாக சிலிண்டரில் இருந்து கியாஸ் வெளியாகி உள்ளது. இதனை பலகார மாஸ்டர் கவனிப்பதற்குள் கியாஸ் அழுத்தம் காரணமாக ரெகுலேட்டர் சிதறி தீப்பற்ற தொடங்கியது.

இதனை அடுத்து டீ கடைக்குள் இருந்தவர்கள், டீ குடித்து கொண்டு இருந்தவர்கள் அங்கு இருந்து தப்பி ஓடினர்.

இருந்த போதிலும் தீகொளுந்து விட்டு எரிந்ததில் கடை முன்பு நிறுத்தப்பட்டு இருந்த 2 இரு சக்கர வாகனங்கள் முற்றிலுமாக எரிந்து நாசமானது.கடை உரிமையாளர் பாலமுரு கனுக்கு லேசான தீக்காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுப்படுத்தினர்.

இந்த விபத்து குறித்து தஞ்சை கிழக்கு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News