உள்ளூர் செய்திகள்

பயிர் கடன், மகளிர் சுய உதவி கடன், மாற்றுத் திறனாளிகள் கடனுதவி, சிறு வணிக கடன், என 578 பயனாளிகளுக்கு ரூபாய் 5 கோடியே 59 லட்சத்து 30 ஆயிரத்து 600 ரூபாய் மதிப்பிலான கடன் உதவிகளை அமைச்சர் காந்தி வழங்கினார். 

ரூ.220 கோடி பயிர் கடன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு நடப்பாண்டு இதுவரையில் ரூ.111.35 கோடி பயிர் கடன் விநியோகம் -அமைச்சர் ஆர்.காந்தி தகவல்

Published On 2022-11-18 15:00 IST   |   Update On 2022-11-18 15:00:00 IST
  • சுய உதவி குழுவினரின் பொருளாதாரத்தை தன்னிறைவு அடையும் வகையில் செய்யப்பட்டு வருகிறது.
  • நெல் நடவு இயந்திரம், கதிர் அடிக்கும் இயந்திரங்கள், போன்றவை மானியத்தில் வழங்கப்பட்டுள்ளது. என அமைச்சர் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி.

கிருஷ்ணகிரியில் 69ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வரவிழா நேற்று நடைபெற்றது.

மாவட்ட கலெக்டர் ஜெயச்சந்திர பானு ரெட்டி தலைமையில் நடைபெற்ற விழாவில் தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர் காந்தி கலந்துகொண்டு பல்வேறு புதிய திட்டங்கள் தொடங்கி வைத்தும், நிறைவு பெற்ற திட்டங்களையும், புதிய கட்டிடங்களையும், புதிய நியாய விலைக் கடைகளை திறந்து வைத்தும், சிறப்புரை ஆற்றினார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஜவகர்லால் நேரு  பிறந்தநாளை முன்னிட்டு ஆண்டுதோறும் நவம்பர் 14ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரையில் அகில இந்திய கூட்டுறவு வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த விழாவில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு பயிர் கடன், விவசாய நகை கடன், சிறு வணிக கடன், மகளிர் சுய உதவி கடன், போன்ற பல்வேறு கடன்கள் வழங்கப்பட்டு பொதுமக்கள் மற்றும் மகளிர் சுய உதவி குழுவினரின் பொருளாதாரத்தை தன்னிறைவு அடையும் வகையில் செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில் கிருஷ்ணகிரி தர்மபுரி ஒருங்கிணைந்த மாவட்டத்தில் 199 கூட்டுறவு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் 120 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் நடப்பு ஆண்டு பயிர் கடன் இலக்காக ரூபாய் 220 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது வரையில் ரூ.13 லட்சத்து 99 விவசாயிகளுக்கு ரூபாய் 111.35 கோடி மதிப்பில் கடன் வழங்கப்பட்டுள்ளது. கால்நடை பராமரிப்புக்கான நடைமுறை மூலதன கடனாக 3997 விவசாயிகளுக்கு ரூபாய் 13.6 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இவை தவிர டிராக்டர், பவர் டிரில்லர், நெல் நடவு இயந்திரம், கதிர் அடிக்கும் இயந்திரங்கள், போன்றவை மானியத்தில் வழங்கப்பட்டுள்ளது. என அமைச்சர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பயிர் கடன், மகளிர் சுய உதவி கடன், மாற்றுத் திறனாளிகள் கடனுதவி, சிறு வணிக கடன், என 578 பயனாளிகளுக்கு ரூபாய் 5 கோடியே 59 லட்சத்து 30 ஆயிரத்து 600 ரூபாய் மதிப்பிலான கடன் உதவிகளை அமைச்சர் காந்தி வழங்கினார். நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் மதியழகன், பிரகாஷ், மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News