உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடியில் வாகனம் மோதி கட்டிட தொழிலாளி பலி

Published On 2023-02-16 14:37 IST   |   Update On 2023-02-16 14:37:00 IST
  • மாரியப்பன் நேற்று இரவு பணி முடிந்து தூத்துக்குடி 3-ம் மைல் பகுதியில் இருந்து சைக்கிளில் வீட்டிற்கு சென்று சென்றார்.
  • இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அடையாளம் தெரியாத வாகனத்தை தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி தாளமுத்துநகர் அருகே உள்ள கிழக்கு காமராஜர்நகரை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது44). கட்டிட தொழிலாளி.

இவர் நேற்று இரவு பணி முடிந்து தூத்துக்குடி 3-ம் மைல் பகுதியில் இருந்து சைக்கிளில் வீட்டிற்கு சென்று சென்றார். எட்டயபுரம் ரோடு ஜோதிபுரம் பகுதியில் சென்ற போது பின்னால் வந்த வாகனம் அவரது சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் பலத்த காயமடைந்த மாரியப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சிப்காட் இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து அடையாளம் தெரியாத வாகனத்தை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News