உள்ளூர் செய்திகள்

14 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கட்டிட தொழிலாளி

Published On 2023-10-24 08:49 GMT   |   Update On 2023-10-24 08:49 GMT
  • வீட்டுக்கு விளையாட அழைத்து சென்று அத்துமீறல்
  • போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்

கோவை,

கோவை அருகே உள்ள செட்டிப்பாளையத்தை சேர்ந்தவர் 30 வயது இளம்பெண். இவர் அந்த பகுதியில் தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவரது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனையடுத்து இளம்பெண் அவரது 14 வயது மகனுடன் தனியாக வசித்து வருகிறார்.

சிறுவன் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 7-ந் தேதி ஆசிரியை தனது மகனுடன் கிணத்துக்கடவு பகுதியில் உள்ள அவரது தாய் வீட்டிற்கு சென்றார். சம்பவத்தன்று மாணவன் வீட்டு முன்பு விளையாடிக்கொண்டு இருந்தார்.

அப்போது அங்கு வந்த ஆசிரியையின் உறவினராக கட்டிட தொழிலாளி ராம்ராஜ் (வயது 48) என்பவர் மாணவரை விளையாடலாம் வா என அவரது வீட்டிற்கு அழைத்து சென்றார். அங்கு வைத்து ராம்ராஜ், மாணவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். மேலும் நடந்த சம்பவங்களை வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டி மாணவரை அவரது வீட்டிற்கு அனுப்பி வைத்தார். இதனால் பயந்த மாணவன் நடந்த சம்பவங்களை தனது தாயிடம் கூறாமல் இருந்தார்.

அதன் பின்னர் மாணவருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவரை அவரது தாய் சிகிச்சைக்காக அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்.

அப்போது மாணவரை டாக்டர்கள் பரிசோதனை செய்த போது அவருக்கு பாலியல் தொல்லை நடந்து இருப்பது தெரிய வந்தது. இதனால் மாணவரின் உடல் நலம் பாதிக்கப்பட்டு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது தெரிய வந்தது.

இது குறித்து டாக்டர்கள் ஆசிரியையிடம் தெரிவித்தனர். இதனை கேட்டு அவர் அதிர்ச்சி யடைந்தார். பின்னர் ஆசிரியை பேரூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் 14 வயது பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கட்டிட தொழிலாளி ராம்ராஜை கைது செய்தனர்.

பின்னர் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். ராம்ராஜூவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

Tags:    

Similar News