உள்ளூர் செய்திகள்

வாலிபரை கொன்றவர் மீது வழக்கு

Published On 2023-01-09 15:28 IST   |   Update On 2023-01-09 15:28:00 IST
  • ரஞ்சனியின் கணவர் சென்னப்பா தட்டி கேட்டுள்ளார்.
  • ஆத்திரம் அடைந்த முனிராஜ் சென்னபாவை கத்தியால் குத்தியுள்ளார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் அருகேயுள்ள பேகைபள்ளி பகுதியை சேர்ந்தவர் ரஞ்சனி. இவரது உறவினர் முனிராஜ் (எ) விஜய் (வயது 25).

ரஞ்சனிக்கும் முனிராஜின் மனைவிக்கும் வாய் தகறாரு ஏற்பட்டுள்ளது. இதை ரஞ்சனியின் கணவர் சென்னப்பா தட்டி கேட்டுள்ளார்.

இதில் ஆத்திரம் அடைந்த முனிராஜ் சென்னபாவை கத்தியால் குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்து ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சென்னப்பா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News