உள்ளூர் செய்திகள்
சின்னமனூர் அருகே பள்ளத்தில் கவிழ்ந்த கார்
- லோயர்கேம்ப்- மதுரை கூட்டு குடிநீர் திட்டத்துக்காக குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
- கார் எதிர்பாராத விதமாக பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
சின்னமனூர்:
தேனி மாவட்டத்தில் லோயர்கேம்ப்- மதுரை கூட்டு குடிநீர் திட்டத்துக்காக குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. சின்னமனூர் அருகே சீலையம்பட்டி பகுதியில் தேசிய நெஞ்சாலை ஓரம் குழாய் பதிக்கும் பணி நிறைவுபெற்றது.
இப்பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் திடீர் பள்ளம் ஏற்பட்டது. அவ்வழியாக வந்த கார் எதிர்பாராத விதமாக பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.