உள்ளூர் செய்திகள்

மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

மணிப்பூரில் அமைதி திரும்ப கொடைக்கானலில் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி

Published On 2023-07-10 04:46 GMT   |   Update On 2023-07-10 04:46 GMT
  • இன கலவரத்தில் இறந்தவர்களுக்காகவும், மணிப்பூரில் வாழ்வாதாரம் இழந்தவர்களின் மறுவாழ்விற்காகவும் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
  • சிறப்பு பிரார்த்தனைகளும் செய்யப்பட்டது.

கொடைக்கானல்:

கொடைக்கானல் ஒருங்கிணைந்த கிறிஸ்தவ கூட்டமைப்பின் சார்பில் மணிப்பூர் மாநிலத்தில் அமைதி திரும்பவும், அங்கு ஏற்பட்ட இன கலவரத்தில் இறந்தவர்களுக்காகவும், மணிப்பூரில் வாழ்வாதாரம் இழந்தவர்களின் மறுவாழ்விற்காகவும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காகவும், மீண்டும் அம்மா நிலத்தில் இயல்பு நிலை திரும்புவதற்காகவும் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

கொடைக்கானல் முன்னாள் நகர் மன்ற தலைவர் டாக்டர் குரியன் ஆபிரகாம் தலைமை தாங்கினார். கொடைக்கானல் நகர் மன்ற தலைவர் செல்லத்துரை, துணை தலைவர் மாயக்கண்ணன், முன்னாள் நகர் மன்ற தலைவர் முகமது இப்ராஹிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முஸ்லிம் ஜமாத்தைச் சேர்ந்தவர்களும், சி.எஸ்.ஐ. போதகர்கள் ஜெகதீஷ் கிருபாகரன், வேத முத்து, பிரசாத், கத்தோலிக்க சகோதரிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டார்கள்.

சிறப்பு பிரார்த்தனைகளும் செய்யப்பட்டது.

Tags:    

Similar News