உள்ளூர் செய்திகள்

கோவையில் அடைக்கலம் தருகிறேன் என்ற பெயரில் 14 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபர்

Published On 2023-11-07 09:24 GMT   |   Update On 2023-11-07 09:24 GMT
  • கணவன்-மனைவியாக வாழ்ந்தது அம்பலம்
  • போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை

கோவை,

நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவரது தந்தை தாயை கொலை செய்த வழக்கில் கைதாகி ஜெயிலில் உள்ளார்.

இதனால் சிறுமியை கவனிக்க யாரும் இல்லாத நிலையில் அவரை தந்தையின் தங்கை கோவை மாவட்டம் பொள்ளாச்சி கோலார்பட்டியில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்து வந்தார். கடந்த 2 மாதங்களாக சிறுமி அங்கு வசித்து வந்தார். அப்போது சிறுமியை அவரது அத்தை மகன் அய்யப்பன் (வயது 24) என்பவர் கடந்த செப்டம்பர் மாதம் 2-ந் தேதி திருமணம் செய்து கொண்டார். பின்னர் 2 பேரும் கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்தனர்.

சட்டத்துக்கு புறம்பாக 14 வயது சிறுமியை வாலிபர் திருமணம் செய்து கொண்டு வாழ்வது அந்த பகுதியை சேர்ந்த குழந்தைகள் நல அமைப்பினருக்கு தெரிய வந்தது. அவர்கள் இது குறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர்.

புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீசார் 14 வயது சிறுமியை திருமணம் செய்த அய்யப்பன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News