உள்ளூர் செய்திகள்

பொள்ளாச்சி அருகே சிறுமியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர்

Published On 2023-10-22 09:19 GMT   |   Update On 2023-10-22 09:19 GMT
  • ஆசை வார்த்தைகளை தெரிவித்து பலாத்காரம் செய்தது அம்பலம்
  • போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை

பொள்ளாச்சி,

பொள்ளாச்சியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஷ்(20). இவர் கட்டிட வேலை செய்து வருகிறார். கடந்த 5 வருடங்களுக்கு முன்பு ஜெகதீசுக்கு சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இந்த நிலையில் கடந்த மாதம் 3-ந் தேதி சிறுமி தனது வீட்டில் இருந்தார். அப்போது அங்கு வந்த ஜெகதீஷ், சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்றார். அங்கு யாரும் இல்லாத போது சிறுமியிடம் ஆசை வார்த்தைகளை தெரிவித்து, அவரை பலாத்காரம் செய்தார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சிறுமிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து பெற்றோர் அவரை அருகே உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

அங்கு டாக்டர்கள் பரிசோதனையில் சிறுமி 2 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதை கேட்டதும் பெற்றோர் அதிர்ச்சியாகினர். சம்பவம் குறித்து தங்களது மகளிடம் விசாரித்தனர். அப்போது சிறுமி தனக்கு நடந்தவற்றை தெரிவித்தார்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.

போலீசார் ஜெகதீஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News