உள்ளூர் செய்திகள்

பஸ் சக்கரத்தில் சிக்கி பத்திர எழுத்தர் பலியானார்.

Published On 2023-02-08 14:52 IST   |   Update On 2023-02-08 14:52:00 IST
  • குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
  • பஸ் எதிர்பாராதவிதமாக மீது மோதியது.

குன்னூர்,

நீலகிரி மாவட்டம் குன்னூர் உட்லண்ட்ஸ் பகுதியை சேர்ந்தவர் அப்துல் கனி (வயது 62). பத்திர எழுத்தர். இவரது மனைவி நஸ்ரின். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்தநிலையில் அப்துல் கனி வழக்கம்போல் பணிக்கு சென்றார். பின்னர் மதியம் குன்னூர்-ஓட்டுப்பட்டறை சாலையில் உள்ள பள்ளிவாசலுக்கு செல்வதற்காக தாலுகா அலுவலக சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது குன்னூரில் இருந்து பழைய அருவங்காடு செல்லும் அரசு பஸ் எதிர்பாராதவிதமாக அப்துல் கனி மீது மோதியது. இதில் நிலை தடுமாறி அவர் கீழே விழுந்தார். பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் பஸ்சின் சக்கரத்தில் சிக்கிய அப்துல் கனி, உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த குன்னூர் நகர போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து குன்னூர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News