உள்ளூர் செய்திகள்

ேகாவையில் இளம்பெண்ணிடம் 5 பவுன் செயின் பறிப்பு

Published On 2023-03-24 09:30 GMT   |   Update On 2023-03-24 09:30 GMT
  • 3 பெண்கள் கூட்ட நெரிசலை பயன்படுத்தி தங்க செயினை பறித்து சென்றனர்.
  • கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரை தேடி வருகின்றனர்.

கோவை,

கருமத்தம்பட்டி அருகே உள்ள வேட்டைக்காரன் குட்டையை சேர்ந்தவர் ஜெயபாலன். இவரது மனைவி மஞ்சு (வயது 30). இவர் அந்த பகுதியில் உள்ள எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று கருமத்தம்பட்டி நால் ரோட்டில் இருந்து சின்னியம்பாளையம் நோக்கி சென்ற அரசு பஸ்சில் ஏறினார். அப்போது அந்த பஸ்சில் முககவசம் அணிந்தபடி நின்றிருந்த 3 பெண்கள் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மஞ்சு கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க செயினை பறித்து சென்றனர். இதுகுறித்து அவர் கருமத்தம்பட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்ணிடம் 5 பவுன் தங்க செயினை பறித்து சென்ற 3 பெண்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News